புதன், ஜூலை 31

அஞ்சலி : எழுத்தாளர் கண.மகேஸ்வரன்



    கரவெட்டி மண் தந்த ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவராகிய கண. மகேஸ்வரன் அவர்கள் 1968 இல் சிரித்திரனில் எழுதத் தொடங்கியவர். ஈழத்து இதழியற் துறைக்கு 1981- 1984 வரை “தாரகை” என்ற சஞ்சிகையின் மூலம் தனது காத்திரமான பங்களிப்பைத் தந்தவர். முதல் இரண்டு இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பின்னர் 3ஆவது இதழ் முதல் 12 ஆவது இதழ் வரை ஆசிரியராகவும் இருந்து ஈழத்தில் நாம் அறியக்கூடிய பல படைப்பாளிகளின் படைப்புக்களை வெளிக்கொண்டு வந்தவர்.

   அடிப்படையில் கண. மகேஸ்வரன் ஒரு சிறுகதை ஆசிரியர். அவரின் “எல்லை வேம்பு” (1994), “தீர்வு தேடும் நியாயங்கள்”(2016)ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் “மலரும் வாழ்வு”(1992) என்ற குறுங்காவியமும் நூலுருப் பெற்றுள்ளன. குறுங்கதைகள், கவிதைகள் ஆகியனவும் எழுதியுள்ளார். மிகப் பரவலாகக் கணிப்புப் பெற்ற “உயிர்ப்புகள்” தொகுப்பின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டவர். இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதியவர்.

கிராம வாழ்வின் பண்பாட்டுக் கோலங்களையும் மண்மணம் கமழும் சொல்லாட்சியையும் தனது கதைகளில் கொண்டு வந்தவர். சாதாரண மனிதர்களின் பாடுகளை தன் கதைகளில் அழகாகப் பதிவுசெய்தவர். பல சந்தர்ப்பங்களில் தன் எழுத்து முயற்சிகளுக்காகப் பாராட்டினைப் பெற்றுக்கொண்டவர். 2015 இல் வடமராட்சி கலாசார பேரவை “கலைஞான வாரிதி” விருதினை வழங்கிக் கௌரவித்தது. 2016 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான வடமாகாண விருதும் அவரது சிறுகதைத்தொகுப்புப் பெற்றுக்கொண்டது.
   தாரகை சஞ்சிகைகளும் அவரின் குறுங்காவியமும் சஞ்சிகை தொடர்பான வாய்மொழிப் பதிவும் 
http://aavanaham.org/islandora/object/noolaham%3A922?fbclid=IwAR04h_FdcNPDRkQorFw4w7EvuPs_F8IaCDnZlmV-54B4UUHJZetSu56D75c
 நூலக எண்ணிம வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88?fbclid=IwAR0m9fcUL9Mru9xKyfCrFzfWIxm-yZ0GD64inmMG8oRXCTbBIDtQGzzBzt0இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் பிரதேசம் பற்றியும் பிரதேசப் படைப்பாளிகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கும், மிகச் சாதாரண மாந்தர்கள் தம் வாழ்வில் கடந்து வந்த பாடுகளை அறிந்து கொள்வதற்கும் அன்னாரின் படைப்புக்கள் ஈழத்து இலக்கியப் புலத்தில் அதிகம் வாசிக்கப்படவேண்டும்.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
25.07.2019

ஞாயிறு, ஜூலை 21

அல்வாயூர் கவிஞர் மு. செல்லையாவின் படைப்புகள்

தேடல் :1
அல்வாயூர் கவிஞர் மு. செல்லையாவின் படைப்புகள்

 அல்வாயூர் கவிஞர் மு.செல்லையாவின் தொகுப்பு முயற்சிக்கு நண்பர்களும் தரும் ஆதரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. கவிஞர் அவர்கள் எழுதிய தனிக்கவிதைகளும் கட்டுரைகளும் ஏனையவையும் தற்போது அல்வாயூர் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் என்ற முதற்தொகுதியாக வரவுள்ளது. முகநூலில் விடுத்த வேண்டுகோள், தனியார் சேகரிப்பு மற்றும் எனது தேடல் மூலமும், நண்பர் செல்வதாஸின் தேடலின் மூலமும் அரிதான படைப்புக்களும் ஆவணங்களும் கிடைத்தவண்ணமுள்ளன.

 இன்னமும் கிடைக்கப்பெறாத பிரதிகள் 

1.  அல்வாய் வேவிலந்தை அம்மன் பதிகம். 
2.  வற்றாப்பளை அம்மன் துதி. 
3. கதிர்காமக் கந்தப்பெருமான் வேல்வெண்பா (2 செய்யுட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.) 
4.சுகாதார சுலோகங்களும் கும்மியும் (2 பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.)

 இன்னமும் கிடைக்கப்பெறாத பிரதிகளைப் பெறும் நோக்கத்தையும் இவ்விடத்தில் பதிவுசெய்யவிரும்புகிறோம்.

 சு.குணேஸ்வரன் &கே.எம் செல்வதாஸ் (தொகுப்பாளர்கள்)


அரிதான பிரதிகளைப் பாதுகாத்துத் தந்தவர்கள்: 



துன்னாலை மகேந்திரம் (வளர்பிறை – முதற்பதிப்பு – அட்டைமுகப்பு இல்லாமலே கிடைத்தது.) 




கலாமணி பரணீதரன் ( வளர்பிறை – முதற்பதிப்பு அட்டைமுகப்பு) 




அ. விஜயநாதன் ( தேசிய கீதம்) 





செல்லத்துரை சுதர்சன் ( பொலிகண்டி கந்தவனநாதர் தோத்திரக் காரிகை, ) 


 கலாபூஷணம் ம. கணேசலிங்கம் (புதிய வண்டுவிடுதூது – முதற்பதிப்பு) 



செல்லத்துரை சுதர்சன் ( கயரோகம், ) 

அல்வாயூர்க் கவிஞர்

அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் பிற்காலத் தோற்றத்துடன் கூடிய ஒரு புகைப்படம் இணையப்பக்கத்தில் முதல்முதலில் பகிரக் கிடைத்துள்ளது. மிக ஆர்வத்துடன் இதனைத் தேடித் தந்துதவிய கவிஞரின் பேரன் விவேகானந்தன் கவிச்செல்வனுக்கு அன்பும் நன்றியும்

ஞாயிறு, டிசம்பர் 11

பண்பாட்டுப் பாடல்கள் - ஒரு குறிப்பு



- சு. குணேஸ்வரன்--------

எமது பிரதேசத்தில் வழங்கி வந்த சிறுவர் மற்றும் நாட்டார் பாடல் வகையைச் சார்ந்தபாடல்களில் சிலவற்றைத் தேவைகருதி சிறிய பிரசுரமாக செய்யவேண்டியிருந்தது. அதுவே ‘பண்பாட்டுப் பாடல்கள்’ என்ற நூலாகும்.

திருமதி இராசலட்சுமி இராசதுரை அவர்களின் முப்பத்தோராம் நினைவுநாளினை முன்னிட்டு குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் 28 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூலை சு. குணேஸ்வரன் தொகுத்துள்ளார். அட்டை ஓவியம் கோ. கைலாசநாதனுடையது. இதழை தானாவிஷ்ணுவும் சு. சிவனேஸ்வரனும் அழகாக வடிவமைத்துள்ளனர். அன்னார் இராசலட்சுமி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை கலாபூஷணம் சி. சிவநேசன் எழுதியுள்ளார். வெளியீட்டுக் குறிப்பை அன்னாரின் பிள்ளைகளான இராஜிகுமார், செல்வனா, தர்சனா ஆகியோர் எழுதியுள்ளனர்.

இதில் சிறுவர் பாடல் மற்றும் நாட்டார் பாடல் வகையைச் சேர்ந்த 15 பாடல்கள் அடங்கியுள்ளன.

1. அம்மாவின் அன்பு – வித்துவான் க. வேந்தனார்
2. சட்டை – இ. நாகராஜன்
3. பறவைக்குஞ்சு - வித்துவான் க. வேந்தனார்
4. எறும்புகள் – எம்.ஸீ. எம். ஸுபைர்
5. பசுவும் கன்றும் – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
6. பவளக்கொடி – கல்லடி வேலுப்பிள்ளை
7. அம்மா சுட்ட தோசை – (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
8. மின்னி மின்னிப் பூச்சி - (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
9. பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம் – (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
10. சின்னக்குருவி – மஹாகவி (து. உருத்திரமூர்த்தி)
11. பூஞ்சோலை – கவிஞர் அல்வாயூர் மு.செல்லையா
12. கத்தரி வெருளி – நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
13. ஆடிப்பிறப்பு - நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
14. மீன்பிடிகாரர் பாடல் – (நாட்டார் பாடல் வகையைச் சார்ந்தது)
15. மழையே மழையே – நவாலியூர்க் கவிராயர்

சனி, மார்ச் 5

‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா



ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தியும், வெளியீட்டுரையை கோப்பாய் சிவமும், அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும், ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரனும் நிகழ்த்துவர். ஏற்புரையை செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்துவார். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் எஸ்.பி நாகரத்தினமும் இணைப்பிரதிகளை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் பிரம்மஶ்ரீ க. இலட்சுமணசர்மாவும் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலனும் யாழ் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி சுகந்தி சதாசிவமூர்த்தியும் பெற்றுக்கொள்வர். 1946 முதல் 1948 வரை வெளிவந்த 23 மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பாக அமையும் இந்நூல் கலை இலக்கிய வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.


வெள்ளி, செப்டம்பர் 11

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற நந்தினி சேவியர் அவர்களை வாழ்த்துகின்றோம்





17 வது கொடகே தேசிய சாகித்திய விருதுவிழாவில் தமிழ்மொழி மூலம் எழுதிய படைப்பாளிகளில் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர் நந்தினிசேவியர் அவர்களுக்கு இம்முறை கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வு (10.09.2015) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. கொடகே நிறுவனர் தேசபந்து சிரிசுமன கொடகே அவர்கள் விருதினை வழங்கிக் கௌரவித்தார். நந்தினி சேவியர் கலை இலக்கியத்துறையில் நீண்டகாலமாக பங்களித்து வருபவர். அவரின் படைப்புக்களை ஒன்று சேர்த்து (அவர் எழுதியவற்றில் தொலைத்துவிட்ட குறுநாவல்கள், சிறுகதைகள் தவிர்ந்த) அண்மையில் விடியல் பதிப்பகம் “நந்தினி சேவியர் படைப்புகள்” என்ற காத்திரமான தொகுப்பினையும் வெளியிட்டிருந்தது. நந்தினி சேவியர் அவர்கள் தொடர்ந்தும் தமது எழுத்துலக அனுபவங்களை மேலும் முழுமூச்சுடன் தமிழ் இலக்கிய உலகிற்கு தருவதற்கு இந்த விருது ஒர் உந்துதலாக அமையவேண்டும்.


வெள்ளி, ஜூன் 26

திருமறைக்கலாமன்றம் கலைப்பணியில் 50 ஆண்டுகள்




தமிழ்விழா


முதலாம் நாள் நிகழ்வுகள்

திருமறைக் கலாமன்றம், கலைத்தூது கலையகம், இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்


ஆய்வரங்கு

நாவல் அரங்கு
26.06.2015 வெள்ளிக்கிழமை, காலை 8.45- 12.30


தலைமை: பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா

1. ‘எடுத்துரைப்பியல் நோக்கில் ஈழத்து தமிழ் நாவல்கள்’ - பேராசிரியர் செ.யோகராசா

2. ‘ஈழத்து நாவல்களில் சமூக மாற்றம்’ - திரு.ஈ.குமரன்

3. ‘புலம்பெயர் நாவல்களின் நுண் அரசியலும், புதிய சாத்தியப்பாடுகளும் - திரு.சு.குணேஸ்வரன்

4. ‘படைப்பு மனமும் அனுபவ வெளிப்பாடும்’ - திரு.ச.ஆ.உதயன்



அரங்கு : பண்பாடு, ஊடகம், இணையம்
26.06.2015 வெள்ளிக்கிழமை 1.45 - 4.30

தலைமை : திரு.ம.நிலாந்தன்

1. ‘அறிவுருவாக்கப் பண்பாட்டுத் தளத்தில் தமிழ் இணையம்’ - திரு.கெ.சர்வேஸ்வரன்

2. ‘ஈழத்து அச்சு ஊடக வெளியில் சமகாலத் தமிழ் இலக்கியம் - திரு.கருணாகரன்

3. ‘சமகால ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் காண்பியக் கலைகள் - திருமதி. பப்சி மரியதாசன்

4. ‘ஈழத்தில் தமிழ்த் திரைப்பட இரசனை’ திரு.ச.இராகவன்

• கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இல. 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளன.

பிரதம விருந்தினர் :
திரு த. குருகுலராஜா,
கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், வடக்கு மாகாணம்.

சிறப்புரை :
திரு ச. லலீசன்,
உப அதிபர்,
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.

கலை நிகழ்வுகளாக திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் நடன ஆசிரியை திருமதி. அகல்யா ராஜபாரதியின் மாணவிகள் வழங்கும் நடனங்களும், செல்வி எஸ்.பிரபாலினி குழுவினர் வழங்கும் இசைக் கச்சேரியும் , திருமறைக் கலாமன்றம் வழங்கும் ‘மன விகாரம்’ நவீன நாடகமும் இடம்பெறும்



திருமறைக் கலாமன்றம் - "தமிழ் விழா"

இரண்டாம்நாள் நிகழ்வுகள் 

திருமறைக் கலாமன்றம், கலைத்தூது கலையகம், இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்

ஆய்வரங்கு
அரங்கு : சிறுகதை
27.06.2015 சனிக்கிழமை, காலை 8.45- 12.30
தொடக்கவுரை : திருமதி கோகிலா மகேந்திரன்
தலைமை : ஐ. சாந்தன்
ஆய்வுரைகள்
1. ‘படைப்பிலக்கிய நோக்கில் ஈழத்துச் சிறுகதைகள்’ - குப்பிழான் ஐ.சண்முகன்
2. ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை - கருத்துநிலையும் , புதிய வரைபுகளும்’ - திசேரா
3. ‘இனவரையியல் நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள்’ - திரு.த.அஜந்தகுமார்
4. ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் பண்பாட்டு அடையாளமும் இருப்பியலும்’ - திரு.இ.இராஜேஸ்கண்ணன்
-------------
அரங்கு : விமர்சனம், மலையக இலக்கியம்
27.06.2015 சனிக்கிழமை, பகல் 1.30
தலைமை : திரு.தெ.மதுசூதனன்
ஆய்வுரைகள்
1. ‘ஈழத்து நவீன இலக்கிய விமர்சனமும் , கலாரசனையும் - திரு.தி.செல்வமனோகரன்
2. ‘கிழக்கிலங்கையின் விமர்சன வளர்ச்சி’ - திரு.அப்துல் றஷாக்
3. ‘மலையகத்தின் சமகால நவீன இலக்கிய செல்நெறி’ - திரு.சு.தவச்செல்வன்
4. ‘மலையக இலக்கியத்தில் பண்பாட்டுக் கலைகள் - திரு. பொன்.பிரபாகரன்

மாலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இல. 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளன.
தலைமை : திரு ம. யேசுதாசன் (பொறுப்பாளர், இசைப்பிரிவு, திருமறைக்கலாமன்றம்)
பிரதம விருந்தினர் :
திரு நா. வேதநாயகன்
அரசாங்க அதிபர்,
யாழ் மாவட்டம்
சிறப்புரை :
அருள்பணி தமிழ்நேசன் அடிகள்
இயக்குநர், ‘கலையருவி’ சமூகத் தொடர்பு அருட்பணி மையம்,
மன்னார் மறைமாவட்டம்.
கவியரங்கம் – ஊருக்கு நல்லது சொல்வேன்
தலைமை : கவிஞர் சோ.பத்மநாதன்
பங்கேற்போர்
1. திரு இ.சு முரளிதரன்
2. திரு நாக சிவசிதம்பரம்
3. திரு த. ஜெயசீலன்
4. திரு கு. றஜீபன்
ஓம்கார தெய்வீக ஆராதனை மற்றும் திருமறைக் கலாமன்றம் வழங்கும் ‘குசேலர் இசை நாடகமும் இடம்பெறும்.



மூன்றாம் நாள் நிகழ்வுகள்

திருமறைக் கலாமன்றம், கலைத்தூது கலையகம், இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்
ஆய்வரங்கு
அரங்கு : கவிதை
28.06.2015 ஞாயிற்றுக்கிழமை,  காலை 8.45- 12.30
தலைமை : சோ. பத்மநாதன்
தொடக்கவுரை : ந. சத்தியபாலன்
ஆய்வுரைகள் 

1.    ‘ஈழத்து தமிழ்க் கவிதைகளில் முஸ்லிம்களின் இருப்பும் ,எதிர்ப்பரசியலும்’  - திரு.சிராஜ் மஷ்ஹர்
2.     ‘சமூகப் பண்பாட்டு அசைவியக்கமும் , ஈழத்துப் பெண்களின் கவிதைகளும்’ - திரு.சி,ரமேஸ்
3.    ‘ஈழத்து நவீன கவிதை-படைப்பு நிலையும் , வெளிப்பாடும்’ - திரு.சித்தாந்தன்
4.    ‘ஈழத்தில் தமிழில் நிகழ்ந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளின்அரசியல்’ - திரு.வேல்நந்தகுமார்

அரங்கு -  நாடகம்
28.06.2015 ஞாயிற்றுக்கிழமை, பகல் 1.30
தலைமை : கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் 
ஆய்வுரைகள்
1.     ‘மரபுவழி நாடகங்களின் இருப்பும் , இயங்குநிலையும் - கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன்
2.    ‘திருமறைக் கலாமன்றத்தின் அரங்கச் செயற்பாடுகள் - ஒரு பார்வை’ -   திரு பா.இரகுவரன்
3.     ‘யுத்தத்துக்குப் பின்னான அரங்கப்போக்குகள்’ - கலாநிதி சி.ஜெயசங்கர்
4.    ‘கற்கை நெறியாக அரங்கு எதிர்கொள்ளும் சவால்கள் -  திரு.செ.செல்வகுமார்


மூன்றாம் நாள் மாலை நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக யாழ் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமான் ஆ.நடராஜன் கலந்து சிறப்பிப்பதுடன், சிறப்புரையை கலாநிதி தமிழ்மணி அகளங்கன் வழங்குவார். கலை நிகழ்வுகளாக திருமறைக் கலாமன்ற இளங்கலைஞர்கள் வழங்கும் ஒயிலாட்டமும் , கலைவாணர் வில்லிசைக் குழுவினர் வழங்கும் ‘சிலம்பு சிரித்தது’ என்னும் வில்லிசையும், திருமறைக் கலாமன்ற கலைஞர்கள் வழங்கும் ‘கம்பன் மகன்’ தென்மோடி நாட்டுக்கூத்தும் இடம்பெறும்.