புதன், ஆகஸ்ட் 31

காற்றுவெளி



செப்ரெம்பர் மாத புதிய இதழ் வெளிவந்துள்ளது.



காற்றுவெளி செப்ரெம்பர் மாத இதழ் சமகால அரசியலை வெளிப்படுத்தும் கவிதைகளுடன், கலாமோகனின் 'மூன்று நகரங்களின் கதை' டொக்டர் முருகானந்தனின் மு.பொ பற்றிய கட்டுரை உள்ளடங்கலாக மலர்ந்துள்ளது.

காற்றுவெளி மின்னிதழின் செப்ரெம்பர் மாத அட்டையை அலங்கரிப்பது துவாரகனின் ஒளிப்படம்.

முத்தமிழ் விழா







திங்கள், ஆகஸ்ட் 29

நந்தினி சேவியரின் புதிய சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.




நெல்லிமரப் பள்ளிக்கூடம்

எழுத்தாளர் நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கொடகே சகோதரர்களால் வெளியிடப்பட்ட இந்நூலைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
நூலின் விலை 350

Mail Support By
VASTEC Technologies (pvt)Ltd.
#65,Station Road,
Vavuniya
Srilanka
024-2222869
024-2221412
mail@vastec.org
www.vastec.org

அல்லது
nanthiny xavier
269,N.C Road
Trincomalee.
T.P 0771495629

நூல் பற்றிய மேலதிக இணைப்பு





வியாழன், ஆகஸ்ட் 18

எழுத்தாளர் விபரத்திரட்டு





முல்லை அமுதன் அவர்களால் தொகுக்கப்பட்ட 'எழுத்தாளர் விபரத்திரட்டு' மின்நூல் வெளிவந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் படைப்பாளிகளின் பெயர் விபரங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது.

இது தனது முதல் முயற்சி எனவும் பலரின் விடுபடல்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் ஏனையவர்களின் அபிப்பிராயங்களுடன் மார்கழியின் பின்னர் நூலாக்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அடிப்படையில் (காலவரிசை,அகரவரிசை,படைப்புநிலை) தொகுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

முல்லை அமுதனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

பின்வரும் இணைப்பில சென்று பார்க்கலாம்.http://writersdetail.blogspot.com/

- துவாரகன்

செவ்வாய், ஆகஸ்ட் 16

ஒரு சந்திப்பு



எழுத்தாளர் சுதாராஜ்

தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைத்தல், நூல்கள் கொள்வனவு, எழுத்தாளர்கள் வாசகர்களை ஊக்குவித்தல், வீட்டுநூலகத்திட்டம் ஆகியன குறித்து ஒரு சந்திப்பு 15.08.2011 அன்று கொற்றாவத்தை பூமகள் சனசமூக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் எழுத்தாளர் சுதாராஜ், புத்தக அபிவிருத்தி சபையின் தலைவரும் சிங்கள எழுத்தாளருமான குணசேன விதான, கல்வி அமைச்சின் புத்தக அபிவிருத்தி சபை செயலாளர் விஜித வெலகெடற ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமை தாங்கி கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.

கலந்துரையாடலில் ராஜேஸ்கண்ணன், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், சு.குணேஸ்வரன், தெணியான் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.
மூத்த எழுத்தாளர் தெணியான்

சிங்கள எழுத்தாளர் குணசேன விதான