ஞாயிறு, ஜூலை 21

அல்வாயூர் கவிஞர் மு. செல்லையாவின் படைப்புகள்

தேடல் :1
அல்வாயூர் கவிஞர் மு. செல்லையாவின் படைப்புகள்

 அல்வாயூர் கவிஞர் மு.செல்லையாவின் தொகுப்பு முயற்சிக்கு நண்பர்களும் தரும் ஆதரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. கவிஞர் அவர்கள் எழுதிய தனிக்கவிதைகளும் கட்டுரைகளும் ஏனையவையும் தற்போது அல்வாயூர் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் என்ற முதற்தொகுதியாக வரவுள்ளது. முகநூலில் விடுத்த வேண்டுகோள், தனியார் சேகரிப்பு மற்றும் எனது தேடல் மூலமும், நண்பர் செல்வதாஸின் தேடலின் மூலமும் அரிதான படைப்புக்களும் ஆவணங்களும் கிடைத்தவண்ணமுள்ளன.

 இன்னமும் கிடைக்கப்பெறாத பிரதிகள் 

1.  அல்வாய் வேவிலந்தை அம்மன் பதிகம். 
2.  வற்றாப்பளை அம்மன் துதி. 
3. கதிர்காமக் கந்தப்பெருமான் வேல்வெண்பா (2 செய்யுட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.) 
4.சுகாதார சுலோகங்களும் கும்மியும் (2 பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.)

 இன்னமும் கிடைக்கப்பெறாத பிரதிகளைப் பெறும் நோக்கத்தையும் இவ்விடத்தில் பதிவுசெய்யவிரும்புகிறோம்.

 சு.குணேஸ்வரன் &கே.எம் செல்வதாஸ் (தொகுப்பாளர்கள்)


அரிதான பிரதிகளைப் பாதுகாத்துத் தந்தவர்கள்: 



துன்னாலை மகேந்திரம் (வளர்பிறை – முதற்பதிப்பு – அட்டைமுகப்பு இல்லாமலே கிடைத்தது.) 




கலாமணி பரணீதரன் ( வளர்பிறை – முதற்பதிப்பு அட்டைமுகப்பு) 




அ. விஜயநாதன் ( தேசிய கீதம்) 





செல்லத்துரை சுதர்சன் ( பொலிகண்டி கந்தவனநாதர் தோத்திரக் காரிகை, ) 


 கலாபூஷணம் ம. கணேசலிங்கம் (புதிய வண்டுவிடுதூது – முதற்பதிப்பு) 



செல்லத்துரை சுதர்சன் ( கயரோகம், ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக