சனி, டிசம்பர் 31

காற்றுவெளி ஜனவரி 2011 இதழ் வெளிவந்துள்ளது.



140 பக்கத்தைக் கொண்ட காற்றுவெளியின் மின்னிதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் கடந்த டிசம்பர் மாத இதழ் பற்றிய மதிப்பீடு ஒன்றினை பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் எழுதியுள்ளார். தவிரவும் வழமையான அம்சங்களுடன் சிறப்பாக மிளிரும் காற்றுவெளியை இணையத்தில் நேரடியாகவே வாசிக்கலாம்.

வியாழன், டிசம்பர் 15

கலைஞர்களுக்கான வேண்டுகோள்





‘அகில இலங்கை கலை இலக்கிய சங்கம்’ இலங்கைக் கலைஞர்களின் விபரத் திரட்டினை ஆவணப்படுத்தி வெளியிடவுள்ளது.


கணனி மயப்படுத்தப்படவுள்ள விபரத் திரட்டினூடாக உலகெங்கும் வாழ்பவர்கள்; இலங்கைக் கலைஞர்களின் சிறந்த பணிகளை அறிந்து கொள்ளவும் அவர்களோடு நேரடியாகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.


இலங்கையிலும், புலம்பெயர்ந்தும் வாழும் இலங்கைக் கலைஞர்கள் தங்கள் சுயவிபரத்தினை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சங்கச் செயலாளர் எஸ்.கணபதிப்பிள்ளை அறிவித்துள்ளார்.


பொன் சுகந்தன்
தலைவர்
அகில இலங்கை கலை இலக்கிய சங்கம்
நெல்லியடி கரவெட்டி

தொடர்புக்கு :- 0776524775

செவ்வாய், டிசம்பர் 13

நூல் அறிமுக அரங்கு


'உயில்' கலை இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் நந்தினிசேவியரின் "நெல்லிமரப் பள்ளிக்கூடம்" என்ற சிறுகதைத் தொகுதி நூல் அறிமுக அரங்கு 17.12.2011 மாலை 3.00 மணிக்கு நெல்லியடி மாலிசந்தியில் அமைந்துள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வு பற்றிய அழைப்பிதழ்


ஞாயிறு, டிசம்பர் 11


நந்தினி சேவியர்


2012 இல் தரம் 10 கற்கவிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 'தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநூலில்' (திருத்தப்பட்ட மீள்பதிப்பு) நாடறிந்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவராகிய நந்தினி சேவியரின் சிறுகதைகள் பற்றி கவிஞர் இ. முருகையன் எழுதிய கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.

இது நந்தினி சேவியர் அவர்களின் எழுத்துக்குக் கிடைத்த மேலுமொரு அங்கீகாரமாகக் கருதலாம்.

பாடநூலில் பக்கம் 32-36 வரையுள்ள அக்கட்டுரையினை வாசகர்களுக்கு தருகிறேன். (படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிதாக்கி வாசிக்கமுடியும்)

- சு. குணேஸ்வரன்