ஞாயிறு, டிசம்பர் 11

பண்பாட்டுப் பாடல்கள் - ஒரு குறிப்பு



- சு. குணேஸ்வரன்--------

எமது பிரதேசத்தில் வழங்கி வந்த சிறுவர் மற்றும் நாட்டார் பாடல் வகையைச் சார்ந்தபாடல்களில் சிலவற்றைத் தேவைகருதி சிறிய பிரசுரமாக செய்யவேண்டியிருந்தது. அதுவே ‘பண்பாட்டுப் பாடல்கள்’ என்ற நூலாகும்.

திருமதி இராசலட்சுமி இராசதுரை அவர்களின் முப்பத்தோராம் நினைவுநாளினை முன்னிட்டு குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் 28 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூலை சு. குணேஸ்வரன் தொகுத்துள்ளார். அட்டை ஓவியம் கோ. கைலாசநாதனுடையது. இதழை தானாவிஷ்ணுவும் சு. சிவனேஸ்வரனும் அழகாக வடிவமைத்துள்ளனர். அன்னார் இராசலட்சுமி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை கலாபூஷணம் சி. சிவநேசன் எழுதியுள்ளார். வெளியீட்டுக் குறிப்பை அன்னாரின் பிள்ளைகளான இராஜிகுமார், செல்வனா, தர்சனா ஆகியோர் எழுதியுள்ளனர்.

இதில் சிறுவர் பாடல் மற்றும் நாட்டார் பாடல் வகையைச் சேர்ந்த 15 பாடல்கள் அடங்கியுள்ளன.

1. அம்மாவின் அன்பு – வித்துவான் க. வேந்தனார்
2. சட்டை – இ. நாகராஜன்
3. பறவைக்குஞ்சு - வித்துவான் க. வேந்தனார்
4. எறும்புகள் – எம்.ஸீ. எம். ஸுபைர்
5. பசுவும் கன்றும் – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
6. பவளக்கொடி – கல்லடி வேலுப்பிள்ளை
7. அம்மா சுட்ட தோசை – (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
8. மின்னி மின்னிப் பூச்சி - (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
9. பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம் – (சிறுவர் பாடல் வகையைச் சார்ந்தது)
10. சின்னக்குருவி – மஹாகவி (து. உருத்திரமூர்த்தி)
11. பூஞ்சோலை – கவிஞர் அல்வாயூர் மு.செல்லையா
12. கத்தரி வெருளி – நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
13. ஆடிப்பிறப்பு - நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
14. மீன்பிடிகாரர் பாடல் – (நாட்டார் பாடல் வகையைச் சார்ந்தது)
15. மழையே மழையே – நவாலியூர்க் கவிராயர்

சனி, மார்ச் 5

‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா



ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தியும், வெளியீட்டுரையை கோப்பாய் சிவமும், அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும், ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரனும் நிகழ்த்துவர். ஏற்புரையை செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்துவார். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் எஸ்.பி நாகரத்தினமும் இணைப்பிரதிகளை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் பிரம்மஶ்ரீ க. இலட்சுமணசர்மாவும் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலனும் யாழ் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி சுகந்தி சதாசிவமூர்த்தியும் பெற்றுக்கொள்வர். 1946 முதல் 1948 வரை வெளிவந்த 23 மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பாக அமையும் இந்நூல் கலை இலக்கிய வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.