வெள்ளி, செப்டம்பர் 30

விருது பெறும் மூத்த படைப்பாளிகளுக்கு வாழ்த்து



எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் ஒக்டோபர் 14,15,16 இல் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் கிழக்குமாகாண முதலமைச்சர் விருது பெறுகிறார்
.

எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் ஒக்டோபர் 7,8 இல் மன்னாரில் நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் விருது பெறுகிறார்.


ஈழத்தமிழ்ப் புனைகதைத்துறையில் தவிர்க்கமுடியாத படைப்பாளிகளாக விளங்கும் இரண்டு இலக்கிய ஆளுமைகளுடனும் மிக நெருக்கமான இலக்கிய நட்பினைப் பேணி வருபவர்களில் நானும் ஒருவன்.

ஆரோக்கியமான வழிகாட்டலை எப்போதும் வழங்கும் இரண்டு இலக்கிய ஆளுமைகளுக்கும் கிடைக்கும் கெளரவத்தை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இருவருக்கும் அன்புநிறை வாழ்த்துக்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 25

பேராசிரியர் செ.யோகராசாவுக்கு கெளரவம்

பேராசிரியர் செ. யோகராசா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் யாழ் அரசாங்க அதிபர் அவர்களுடன் கரவெட்டி பிரதேச செயலர் எஸ். சத்தியசீலன், மற்றும் கலாசார உத்தியோகத்தர் சி.சிவஞானசீலன்



வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் (25.09.2011) நடாத்திய கலை இலக்கிய விழாவில் கலைஞர் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு கெளரவிப்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையில் பணியாற்றும் பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தமிழ்ப்பணிக்காக ஆற்றிவரும் சேவைகளுக்காகக் கெளரவிக்கப்பட்டார்.

கௌரவம் பெற்ற எனது ஆசானை வணங்குகிறேன்.
-சு.குணேஸ்வரன்-

நிகழ்வில் இருந்து சில படங்கள்








கௌரவம் பெற்ற ஏனைய கலைஞர்கள்
மற்றும் சமூக சேவையாளர்.


கௌரவம் பெற்றவர்கள் சார்பாக
ஏற்புரை நிகழ்த்தும் பேராசிரியர் செ. யோகராசா

ஞாயிறு, செப்டம்பர் 18

புதிய நூலகம் 8 வது செய்திமடல் வெளிவந்துள்ளது.



நூலகம் நிறுவனத்தின் புதிய நூலகம் செய்திமடலின் 8 வது இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் பத்தாயித்தை எட்டும் ஆவணப் பதிவுகள், கோபியின் ‘எண்ணிம நூலகங்களின் பயன்பாடு’, சு.குணேஸ்வரனின் ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ - நூலறிமுகம், இயல்விருது ஆளுமைகள் மற்றும் 1983-2000 வரை வெளிவந்த புலம்பெயர்ந்தோரின் நாவல்கள் - பட்டியல் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தமிழின் முதற் கலைக்களஞ்சியமான ‘அபிதானகோசம்’ எழுதிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பற்றிய கட்டுரையுடன் நூலகத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ள சட்டநாதனின் நூல்கள் மற்றும் ஈழத்து மொழிபெயர்ப்பியல் நூல்கள் பற்றிய விபரங்களையும் கொண்டமைந்துள்ளது.

குறித்த காலப்பகுதியைத் தாண்டித் தாமதமாகவே 8 வது புதிய நூலகம் வெளிவந்துள்ளதாயினும் அதன் தொடர்ச்சியான வரவு தமிழியல் சார்ந்த பதிவுகள் என்ற வகையில் முக்கியமானது.

புதிய நூலகத்தின் முன்னைய செய்திமடல்களையும் இணையத்திலிருந்து இலவசமாகவே pdf கோவையாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
http://www.noolahamfoundation.org/wiki/index.php?title=Newsletter

பதிவு – சு. குணேஸ்வரன்


சனி, செப்டம்பர் 10

You Cannot Turn Away




கவிஞர் சேரனின் You Cannot Turn Away 

என்ற புதிய கவிதை நூல் வெளிவந்துள்ளது. இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைந்த இருமொழிப்பதிப்பாக வெளிவந்துள்ளது. 
நூல் பற்றிய மேலதிக விபரங்கள்


Product Description

Poetry. Bilingual Edition. Translated from the Tamil by Chelva Kanaganayakam. This book provides, for the first time, a bilingual edition of forty poems by R Cheran. Written over a period of three decades, the poems cover a range of experiences, including love, war, despair, hope, and diaspora. Cheran is considered one of the finest contemporary poets in Tamil, and his poetry is read widely in North America, Europe, and South Asia. Both modernist and unfailingly lyrical, his work is a remarkable blend of tradition and innovation.

About the Author

R Cheran is currently an associate professor in the Department of Sociology, Anthropology and Criminology at the University of Windsor. His publications include HISTORY AND IMAGINATION: TAMIL CULTURE IN THE GLOBAL CONTEXT (2007), New Demarcations: Essays in Tamil Studies (2009), Pathways of Dissent: Tamil Nationalism in Sri Lanka (2010), and Empowering Diasporas: Dynamics of Post War Tamil Transnational Politics (2011).

  • Paperback: 160 pages
  • Publisher: TSAR Publications (September 30, 2011)
  • Language: English
  • ISBN-10: 1894770749
  • ISBN-13: 978-1894770743