சனி, ஜூன் 11

சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா


பதிவு - சு.குணேஸ்வரன்

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும்; கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ நூலுக்கும்; துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைநூலுக்கும் கிடைக்கவிருக்கிறது.

இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்

2008 ஆம் வருடத்துக்கான பரிசும் பாராட்டும் பெறும் நூல்கள்:
நாவல் - 'லோமியா' - எஸ்.ஏ.உதயன்
சிறுகதை - 'நினைவுகள் மடிவதில்லை' - சிற்பி சரவணபவன்
கவிதை-'இதுநதியின் நாள்' - பெண்ணியா
சிறுவர் இலக்கியம் -'வைரப்பனைமரம்' -திருமதி சந்திரா தனபாலசிங்கம்
நாடகம் -'ஒரு கலைஞரின் கதை'- கலைஞர் கலைச்செல்வன்
சமயம் -'சிவபோதச் சிற்றுரை' -மட்டுவில் அ.நடராசா
'இறைவிழுமியம்'- அருட்தந்தை அ.ஸ்ரிபன் (இருவருக்கு பரிசுகள்)
பல்துறை-'மனமெனும் தோணி'-கோகிலா மகேந்திரன்
மொழிபெயர்ப்பு- 1.'சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு' -செங்கை ஆழியன்
2. 'சிறுவர் நீதிப் போதனைக் கதைகள்'-வைரமுத்து சுந்தரேசன்

2009 ஆம் ஆண்டு பரிசு பெறும் நூல்கள்:

நாவல் -'துயரம் சுமப்பவர்கள்' -நீ.பி.அருளானந்தம்
ஆய்வு -'இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்' -கலாநிதி எஸ்.ஜெபநேசன்
சிறுகதை -'ஒருவருக்காக அல்ல'-அமரர் து.வைத்திலிங்கம்
கவிதை-'குரல்வழிக் கவிதை'-அல்.அஹுமத்
சிறுவர் இலக்கியம் – 'தீந்தேன்'- பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்
நாடகம் -'கங்கையின் மைந்தன்'-அகளங்கன்
சமயம்-'ஞானதீபம்'- சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
பல்துறை-'பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள்'-பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதன் மொழி பெயர்ப்பு -'திறந்த கதவு'-திக்குவல்லை கமால்

2009 சான்றிதழ் பெறும் நூல்கள்

கவிதை – 1. ‘விற்பனைக்கு ஒரு கற்பனை’ – ஆரையூர் தாமரை

2. ‘இக்பால் கவிதைகள்’ –ஏ. இக்பால்

சிறுவர் இலக்கியம் – 1.‘தாமரையின் ஆட்டம்’ கே.எம். எம் இக்பால்

2. ‘குறும்புக்கார ஆமையார்’ ஓ.கே குணநாதன்

சிறுகதை – 1. ‘தொலையும் பொக்கிசங்கள்’ இராஜேஸ்கண்ணன்

2. ‘பாட்டுத் திறத்தாலே’ கலாநிதி த. கலாமணி

பல்துறை – 1.‘இலங்கையின் கல்வியும் இன உறவும்’ கெளரி சண்முகலிங்கன்

2.‘சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை’ – சிறீபிரசாந்தன்

நாடகம் - ‘கூத்துக்கள் ஐந்து’ கலையார்வன்

2 கருத்துகள்: