சனி, ஜூன் 11

‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா



பதிவு - சு.குணேஸ்வரன்

வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா 18.06.2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சிறீநிதி நந்தசேகரன், உபாலி லீலாரட்ண அதிதிகளாகக் கலந்து கொள்கிறார்கள். ராஜ சிறீதரன், செ. சதானந்தன், கலாநிதி த. கலாமணி, திக்குவல்லை கமால், இ. இராஜேஸ்கண்ணன்,கவிஞர் மேமன்கவி ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

வதிரி சி.ரவீந்திரன் அவர்கள் கலை இலக்கியத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். படைப்பாளிகளுடன் நல்லுறவினைப் பேணுபவர்களில் முதன்மையானவர். கலை இலக்கியத்தோடு விளையாட்டு, மெல்லிசைப்பாடல், நாடகம், ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது படைப்புக்களில் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியே நூலுருப் பெறும் முதலாவது தொகுதியாகும்.

2 கருத்துகள்: