வெள்ளி, ஏப்ரல் 15

எழுத்தாளர் தகவல் தேவை




அன்புடையீர்.
வணக்கம்.
ஈழத்து இலக்கியப் பரம்பலை முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு நூல் சேகரிப்பு, ஈழத்து நூல்க் கண்காட்சியினை நடாத்துதல், ஈழத்து அறிஞர்களின் வாழ்வுக் குறிப்புக்களை ஆவணப்படுத்தல் என 'காற்றுவெளி' தன் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து 'இலக்கியப் பூக்கள்' நூலை சென்ற ஆண்டு (375 பக்கங்களில்) வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் தொகுதிக்கான கட்டுரைகளை கோரியுள்ளோம். 4/5 பக்கங்கள் வரக்கூடிய வகையில் ஒரு எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை எழுதி அனுப்பலாம்.
ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். கட்டுரை முழுத் தகவலும் அடங்கியதாக இருத்தல் வேண்டும். புகைப்படம் இணைத்திருப்பது அவசியம்.
மேலும்,
முதல் கண்காட்சியின் போது சிறியளவில் அறிமுகம் செய்ய முனைந்த எழுத்தாளர்களின் பட்டியலை இப்போது நூலாக வெளியிடவுள்ளோம். எனவே தங்களைப் பற்றிய தகவல்களைச் சுருக்கமாக(பெயர்,புனைபெயர்,பிறந்த திகதி,கல்வித் தகைமை,தொழில்,படித்த கல்வி நிறுவனங்கள்,பட்டங்கள்,வெளியிட்ட நூல்கள்,சஞ்சிகைகள் போன்ற விபரங்களுடன் ,புகைப்படத்துடன்) எழுதி அனுப்புவதன் மூலம் நூலைச் சிறப்படைய வைக்க முடியும்.
தொடர்ந்து காற்றுவெளியுடன் இணைந்திருங்கள்.
நட்புடன் -நம்பிக்கையுடன்-
முல்லைஅமுதன்.
Email:
Mullaiamuthan_03@hotmail.co.uk
mullaiamuthan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக