ஞாயிறு, செப்டம்பர் 18

புதிய நூலகம் 8 வது செய்திமடல் வெளிவந்துள்ளது.



நூலகம் நிறுவனத்தின் புதிய நூலகம் செய்திமடலின் 8 வது இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் பத்தாயித்தை எட்டும் ஆவணப் பதிவுகள், கோபியின் ‘எண்ணிம நூலகங்களின் பயன்பாடு’, சு.குணேஸ்வரனின் ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ - நூலறிமுகம், இயல்விருது ஆளுமைகள் மற்றும் 1983-2000 வரை வெளிவந்த புலம்பெயர்ந்தோரின் நாவல்கள் - பட்டியல் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தமிழின் முதற் கலைக்களஞ்சியமான ‘அபிதானகோசம்’ எழுதிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பற்றிய கட்டுரையுடன் நூலகத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ள சட்டநாதனின் நூல்கள் மற்றும் ஈழத்து மொழிபெயர்ப்பியல் நூல்கள் பற்றிய விபரங்களையும் கொண்டமைந்துள்ளது.

குறித்த காலப்பகுதியைத் தாண்டித் தாமதமாகவே 8 வது புதிய நூலகம் வெளிவந்துள்ளதாயினும் அதன் தொடர்ச்சியான வரவு தமிழியல் சார்ந்த பதிவுகள் என்ற வகையில் முக்கியமானது.

புதிய நூலகத்தின் முன்னைய செய்திமடல்களையும் இணையத்திலிருந்து இலவசமாகவே pdf கோவையாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
http://www.noolahamfoundation.org/wiki/index.php?title=Newsletter

பதிவு – சு. குணேஸ்வரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக