திங்கள், மார்ச் 26

வே.ஐ.வரதராஜனின் 'என் கடன்' கவிதைநூல் வெளியீடு


யாழ் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் வே.ஐ. வரதராஜனின் 'என் கடன்' என்ற கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு 31.03.2012 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கலாநிதி செ. திருநாவுக்கரசு, சி. சிவதாசன், கலாநிதி த. கலாமணி, கவிஞர் சோ. பத்மநாதன், இ.இராஜேஸ்கண்ணன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், செங்கை ஆழியான், கி. கிருபானந்தா, ஐ. வரதராஜன் ஆகியோர் நிகழ்வில் உரை நிகழ்த்துகின்றனர்.

அன்றையதினம் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த சிறந்த கவிதைநூலுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அல்அஸமத் தின் 'குரல் வழிக் கவிதைகள்'(2009), கவிஞர் சோ. ப வின் 'சுவட்டெச்சம்' (2010) ஆகிய நூல்கள் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக