சனி, அக்டோபர் 8

கலாநிதி ஆ. கந்தையா காலமானார்



ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளருமான கலாநிதி ஆ. கந்தையா ஒக்டோபர் 3ஆந் திகதி காலமானார் என்ற செய்தி அறிந்தேன்.

அன்னார் 45 வரையான நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் புனைவுசார நூல்கள் மிகுந்த கவனத்திற்குரியன. இலங்கையில் வாழ்ந்தபோதும் பின்னர் அவுஸ்திரேலியாவில்  வாழ்ந்து வந்தபோதும் எழுத்துத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். "ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்"  என்ற நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு ஒன்றினை அண்மையில்தான் எழுதியிருந்தேன். அது முதலில் புதிய நூலகத்திலும்திண்ணையிலும்  வந்திருந்தது.

அன்னாரின் தமிழ்ப்பணிகள் என்றும் நினைக்கத்தக்கவை. நான் எழுதிய நூல் அறிமுகத்தினை அன்னாருக்கு எனது அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறேன்.