வெள்ளி, ஏப்ரல் 22

தமிழர் தொன்மை- கருத்தரங்கு




சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் ‘தமிழர் தொன்மை’ என்ற விடயம் பற்றி 24.04.2011 அன்று பருத்தித்துறை நீலவாசாவில் (அறிவோர் கூடல்) கருத்துரை வழங்க இருக்கிறார். மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகும் கருத்துரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும்.
பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் வசித்து வருகிறார். விவசாயத் துறையில் தனது முதற் பட்டத்தைப் பெற்றிருந்தும் தமிழார்வம் காரணமாக 2003 இல் தமிழ்த்துறைக்குள் காலடி எடுத்து வைக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைத் தமிழ் இலக்கியப் பட்டத்தையும் (Bachelor of Literature) தொடர்ந்து முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டத்தையும் ((MA) பெற்றுக்கொண்டார். சிங்கப்பூர் தமிழ்ப் பாடல்களில் மதிப்பீட்டாய்வினை மேற்கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர். (M.Phil) பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
தனது முனைவர் பட்ட (Ph.D)) ஆய்வினை 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கண விலக்கியப் பாடல்களில் காணப்படும் அயலகத் தொடர்புகள்’ என்ற தலைப்பின் கீழ் மேற்கொண்டார். தொடர்ந்து மேல் முனைவர் பட்ட ஆய்வினை (Post Doctorate follow) சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ‘சங்க இலக்கண விலக்கிப் பாடல்களில் காணப்படும் மேற்கோள் அடைவுகள்’ என்ற விடயத்தில் மேற்கொண்டார். தமிழ் நாட்டிலுள்ள முக்கிய ஆய்வாளர்களில் ஒருவராக விளங்குகின்ற பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் தனிப்பட்ட விடயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

தகவல்:- பா.துவாரகன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக